கரூர் மாவட்டம் தோகைமலை பகுதியை சேர்ந்தவர்கள் மாரியப்பன் – மீனா தம்பதியினர். ஏழு வருடங்களுக்கு முன்பு இவர்களுக்கு திருமணம் முடிந்த நிலையில் இத்தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். கொத்தனார் வேலை பார்க்கும் மாரியப்பன் எப்போதும் போல் திருச்சிக்கு வேலைக்கு சென்று விட்டு இரவு வீட்டுக்கு வந்துள்ளார். ஆனால் அப்போது வீட்டில் மனைவி குழந்தைகள் மாயமாகியுள்ளனர்.

மதியம் அவர்கள் மருத்துவமனைக்கு சென்று வருவதாக கூறி வீட்டை விட்டு சென்றுள்ளனர். ஆனால் இரவு வெகு நேரம் ஆகியும் மூவரும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த மாரியப்பன் தோகைமலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.