அரியானா மாநிலத்தில் உள்ள பானிபட் நகரில் ஒரு தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் வலது கால் முழங்காலில் காயம் ஏற்பட்ட நிலையில் ஒருவர் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார். இவரை மருத்துவர்கள் பரிசோதித்தள்ளனர். அப்போது முழங்காலில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர். அதற்கு நோயாளி சம்மதம் தெரிவித்த நிலையில் அறுவை சிகிச்சை நடைபெற்றது.

அப்போது மருத்துவர்கள் வலது காலுக்கு பதில் தவறுதலாக இடது காலில் ஆப்ரேஷன் செய்தனர். இதனால் அவருக்கு நடக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் அந்த நோயாளியிடம் பிரதமரின் காப்பீடு திட்டம் இருந்த போதிலும் அவரிடம் ஆப்ரேஷனுக்காக மருத்துவமனை நிர்வாகம் பணம் வாங்கியுள்ளனர். இந்த செய்தி வெளியான நிலையில் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை அனுப்புமாறு தேசிய மனித உரிமைகள் ஆணையம் மாநில அரசு மற்றும் காவல்துறையினருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.