சதீஷ்கர் மாநிலம் ராய்ப்பூர் பகுதியை சேர்ந்தவர் ஆசிஷ் மிஸ்ரா. வழக்கறிஞரான இவர் மாடு ஒன்றை பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளார். இது தொடர்பான காணொளி சமூக வலைதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதி பதிவான சிசிடிவி காட்சியில் அதிகாலை 3 மணி அளவில் ஆசிஷ் மிஸ்ரா சாலையில் நின்று கொண்டிருந்த மாடு ஒன்றை பாலியல் ரீதியாக துன்புறுத்துகிறார். இந்த சிசிடிவி காட்சி சமூக வலைதளத்தில் வைரலான நிலையில் காவல்துறையினர் விலங்கு வதை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.