தமிழகத்தில் மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கும் விழாவை தவெக தலைவர் விஜய் நடத்தினார். அப்போது சில விஷயங்கள் குறித்து பேசினார். இந்நிலையில் விருது வாங்கும் விழாவில் விஜய் கூறிய கருத்தில் எந்த உள்நோக்கமும் இருப்பதாக தெரியவில்லை என்று விசிக தலைவரும் எம்.பியுமான திருமாவளவன் பேட்டியளித்துள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், மாணவர்களிடம் நல்ல தலைவர்கள் உருவாக வேண்டும் என்று விஜய் கூறியதில் எந்த உள்நோக்கமும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. மாணவர்கள் நல்ல தலைவர்களாக உருவாக வேண்டும் என்ற நோக்கத்தில் தான் அவர் கூறியதாகவே நான் கருதுகிறேன் என கூறியுள்ளார்.