தமிழ்நாட்டில் இன்று முதல் சட்டபடிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 3-ம் ஆண்டு LLB சட்டப் படிப்புக்கு  மாணவர்கள் இன்று விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் வருகின்ற 24-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

அதன்பிறகு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்ற அனைத்து சட்ட கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் சட்டக் கல்லூரிகளில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் மாணவர்கள் ஆன்லைனில் www.tndalu.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.