
இந்தியாவில் ஏழை எளிய மக்கள் அனைவரும் பயனடையும் விதமாக மத்திய அரசு சார்பில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் மக்கள் பலரும் பயனடைந்து வரும் நிலையில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்காக அடல் பென்ஷன் யோஜனா என்ற திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகின்றது. 18 முதல் 40 வயது வரை உள்ளவர்கள் இந்த திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம்.
60 ஆண்டுகள் நிறைவடைந்தால் மாதம் 50000 ரூபாய் ஓய்வூதியம் கிடைக்கும். கணவன் மனைவி இருவரும் சேர்ந்தால் மாதம் தோறும் பத்தாயிரம் ரூபாய் பெறலாம். ஒவ்வொரு மாதமும் பிரீமியம் செலுத்த வேண்டும். இந்த திட்டம் குறித்த முழுமையான விவரங்கள் அறிய https://www.india.gov.in/ என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.