
இந்தியாவில் ஏழை எளிய மக்கள் அனைவரும் பயன் பெரும் விதமாக மத்திய அரசு சார்பில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டங்கள் மூலமாக குழந்தைகள் முதல் மூத்த குடிமக்கள் வரை அனைவரும் பயன் அடைந்து வருகிறார்கள். ஒவ்வொருவரும் பயன் அடையும் விதமாக தனித்தனியாக பல திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளது.
அதன்படி வயதான காலத்தில் மாதந்தோறும் வருமானம் பெற மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் சேரலாம். இந்த திட்டத்தில் அதிகபட்சமாக 30 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம். இந்த திட்டமானது ஆண்டுக்கு 8.2% வருடாந்திர வட்டி கிடைக்கும். 30 லட்சம் ரூபாய் முதலீட்டுக்கு ஆண்டுக்கு 2.46 லட்சம் வட்டி கிடைக்கும். அதாவது மாதம் 20 ஆயிரத்து 500 ரூபாய் பெறலாம். வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களை அணுகி இந்த திட்டத்தில் இணைந்து கொள்ளலாம்.