
சென்னை மாநகராட்சி பள்ளிகளின் தற்போது ஆசிரியர் காலி பணியிடங்கள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதால் பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி தொடக்கப்பள்ளிகளின் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு விசாரணையில் நீதிமன்றம் பள்ளிகளில் எந்த விதியின் கீழ் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுகிறார்கள் , இடமாற்றம் மூலம் நியமிப்பதாக இருந்தால் அதற்கு எந்த பணி விதி ஒப்புதல் வழங்குகின்றது என கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு ஆசிரியர் நியமனம் தொடர்பாக மாநகராட்சிக்கு எந்த விதிகளும் கிடையாது எனவும் பள்ளி கல்வித்துறை விதிகள் பின்பற்றப்படுவதாக சென்னை மாநகராட்சி விளக்கம் அளித்தது. இதனை தொடர்ந்து காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களில் 50 சதவீதத்தை நேரடி தேர்வு மூலமாக நிரப்ப வேண்டும் எனவும் ஆனால் இதுவரை தேர்வு நடத்தப்படவில்லை என வும் தற்போது 499 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் 50 சதவீதம் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு கடிதம் எழுத வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.