புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள கிராமத்தில் 24 வயது இளைஞர் ஒருவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் இவர் மத்திய பிரதேசத்திற்கு வேலைக்காக சென்றுள்ளார். அப்போது அங்கு 23 வயதுடைய வட மாநில பெண் ஒருவரோடு பழகத் தொடங்கி உள்ளார். அந்த பெண்ணுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இருந்தாலும் அந்த இளைஞரோடு நெருங்கி பழகி இருக்கிறார். இதனையடுத்து வேலை முடிந்து விட்டதால் அந்த இளைஞர் கடந்த வருடம் தன்னுடைய சொந்த ஊரான கந்தர்வக கோட்டைக்கு வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பாக அந்த வட மாநில பெண் மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து இளைஞரை தேடி கந்தர்வகோட்டைக்கு வந்துள்ளார். இளைஞர் வீட்டிலேயே நான்கு நாட்கள் தங்கி இருந்துள்ளார். இதற்கிடையே தன்னுடைய மனைவியை காணவில்லை என்று அந்த பெண்ணின் கணவர் மத்திய பிரதேசத்தில் போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த விசாரணையில் அந்த பெண் கந்தர்வக கோட்டைக்கு சென்று இளைஞர் ஒருவரோடு தங்கி இருப்பது தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து காவல்துறையோடு அந்த பெண்ணின் கணவர் கந்தர்வை கோட்டைக்கு வந்துள்ளார். இது குறித்து நடந்த விசாரணையில் அந்த இளைஞர் அந்தப் பெண் விருப்பப்பட்டு தான் கந்தர்வகோட்டை வந்ததாகவும் தனக்கும், அதற்கும் சம்பந்தமில்லை என்று கூறினார். இதனை எடுத்து அந்த பெண்ணை அவருடைய கணவரோடு போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.