தமிழகத்திற் கென தனிப்பட்ட முறையில் உருவாக்கப்பட்ட மாநில கல்விக் கொள்கை அறிக்கை முதல்வர் ஸ்டாலினிடம் சமர்ப்பிக்கப்பட்டது. 2020 ஆம் ஆண்டு மத்திய அரசு அறிமுகம் செய்த புதிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக மாநில கல்விக் கொள்கையை உருவாக்க 2022 ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு பெற்றோர்கள், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் ஆலோசனையை பெற்று அறிக்கை தயாரித்துள்ளது.

அதில் தமிழில் 600 பக்கங்களும் ஆங்கிலத்தில் 500 பக்கங்களும் கொண்ட அறிக்கையில் நீட் தேர்வு இருக்கக் கூடாது, இரு மொழி கொள்கை தொடர வேண்டும், கல்லூரிகளில் சேர 12ஆம் வகுப்பு மட்டுமின்றி 11ம் வகுப்பு மதிப்பெண்களையும் கணக்கில் சேர்க்க வேண்டும், 3,5,8 வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தக்கூடாது உள்ளிட்ட பரிந்துரைகள் மாநில கல்விக் கொள்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.