
எத்தனால் உற்பத்திக்காக மானிய விலையில் அரிசி விற்பனை செய்யப்பட மாட்டாது என்று மத்திய உணவுத்துறை அமைச்சகத்தின் செயலாளர் சஞ்சீவ் சோப்ரா தெரிவித்துள்ளார். எத்தனால் உற்பத்திக்காக, கடந்த ஆண்டு ஜூலை முதல் அரிசி வழங்கப்படவில்லை. உள்நாட்டு உற்பத்தி, சில்லரை விலை உயர்வு, பொருளாதார நிலையற்ற தன்மை உள்ளிட்ட பல காரணங்களால் எத்தனால் உற்பத்தியாளர்களுக்கு அரசிடமிருந்து அரிசி விற்பனை நிறுத்தப்பட்டது.