குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வசித்து வருபவர் ஷைலீஸ். இவருக்கும் மனிஷா என்ற பெண்ணுக்கும் கடந்த 2020ல் திருமணம் நடைபெற்றது. சில மாதங்களாக ஷைலீஸ் பெயரில் இருக்கும் பங்களா வீட்டை மனிஷா பெயருக்கு மாற்றி தருமாறு மாமியார், மாமனார் உள்ளிட்ட மனைவியின் குடும்பத்தார் அவரை துன்புறுத்தி மிரட்டி வந்தனர்.

இதனால் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்த ஷைலீஸ் நேற்று தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். இதில் காவல்துறை விசாரணை நடத்தி மனிஷா அவரின் பெற்றோர் உட்பட நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.