வேலூர் மாவட்டத்தில் வசித்து வரும் 22 வயது வாலிபர் மற்றும் 20 வயது இளம்பெண் காதலித்து வந்த நிலையில் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் அவர்கள் வீட்டை விட்டு வெளியேறி கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். அதன் பிறகு அந்த பெண் கர்ப்பமான நிலையில் குடும்பத்தினர் அவர்களை ஏற்றுக்கொண்டனர். இதனால் அந்த பெண் பிரசவத்துக்காக தன் தாய் வீட்டுக்கு சென்ற நிலையில் குழந்தை பிறந்தது. இதனால் தன்னுடைய மனைவி மற்றும் குழந்தையை பார்ப்பதற்காக வாலிபர் அடிக்கடி மாமியார் வீட்டுக்கு சென்றுள்ளார்.

அப்போது அவருடைய மனைவியின் 17 வயது தங்கையுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த சிறுமியும் தன் அக்காள் கணவரை காதலித்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் சிறுமிக்கு தாலி கட்டிய நிலையில் குடும்பம் நடத்தியுள்ளார்.‌ இதனால் அந்த சிறுமி கர்ப்பமாக்கியுள்ளார். இது சிறுமியின் அக்கா மற்றும் பெற்றோருக்கு தெரிய வந்துள்ளது. இருப்பினும் அந்த வாலிபர் தன் மனைவியின் சம்மதத்துடன் அவருடைய தங்கையை வீட்டுக்கு அழைத்து சென்று குடும்பம் நடத்தியுள்ளார். இதற்கிடையில் மைனர் சிறுமி கர்ப்பமான விஷயம் அப்பகுதியைச் சேர்ந்த பொது மக்களுக்கு தெரியவந்துள்ளது. இது தொடர்பாக குழந்தைகள் நல அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் காட்பாடி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.