
தமிழகத்தில் மின்சார வாகனங்களுக்கான வாகனப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எலக்ட்ரிக் வாகனங்களை பதிவு செய்ய வேண்டாம் என வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் கடந்த திங்கட்கிழமை முதல் சுமார் 3000 மின்சார கார்கள் பதிவு செய்யப்படவில்லை எனவும் கூறப்படுகிறது. அதே சமயம் இருசக்கர வாகனம் உள்ளிட்ட மற்ற மின்சார வாகனங்கள் பதிவு செய்யப்படுகின்றன.