ஈரோடு மாவட்டம் சென்னி மலையை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவருடைய மனைவி சாவித்திரி. இவர்களுக்கு 18 வயதில் ஒரு மகன் உள்ள நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக 15 வருடங்களாக பழனிச்சாமியின் சாவித்திரியும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். பழனிச்சாமிக்கு குடிப்பழக்கம் இருப்பதன் காரணமாக வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு அடிக்கடி தன்னுடைய தாய் பாப்பாத்தியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதற்கிடையில் ஒன்ரறை ஏக்கர் விவசாய நிலத்தை பாப்பாத்தியும், பழனிச்சாமியும் விற்பனை செய்ததாக கூறப்படுகிறது.

அதற்கு முன்பணமாக ஒரு லட்சம் ரூபாய் வாங்கி உள்ளனர். ஆனால் மீதி பணத்தை இன்னும் வாங்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் பழனிச்சாமி தன்னுடைய தாய் பாப்பாத்தியிடம் மீதி பணத்தை வாங்கி கொடுக்கும்படி கேட்டுள்ளார். இதனால் இவர்களுக்கு இடையே வாய் தகராறு ஏற்பட்டதில் தகராறு முற்றி பழனிச்சாமி கோபத்தில் தன்னுடைய வீட்டில் இருந்து அரிவாளை எடுத்து தன்னுடைய தாய் என்று பாராமல் வெட்டியதில் பாப்பாத்தி ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனையடுத்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து பழனிச்சாமியை கைது செய்துள்ளனர் . மகனே தாயை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.