சென்னை மாவட்டம் போரூர் ஏரியில் மீன் பிடிக்க வீசியவளையில் ஆண் சடலம் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஆணின் சடலம் அழுகிய நிலையில் இருந்தது. இதனால் மீனவர் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவம் இடத்திற்கு சென்ற போலீசார் அழுகிய நிலையில் கிடந்த ஆணின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

உயிரிழந்த நபருக்கு 40 வயது இருக்கும். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் சடலமாக மீட்கப்பட்ட நபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.