இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதள பயன்பாடு என்பது அதிகரித்துவிட்ட நிலையில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பல்வேறு விதமான வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். இதில் சில வீடியோக்கள் பாராட்டுகளைப் பெற்றாலும் பல வீடியோக்கள் விமர்சனங்களை பெறும். அந்த வகையில் தற்போது தென் அமெரிக்காவில் நடந்த ஒரு சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்நாட்டைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் கால்பந்து போட்டி பார்ப்பதற்காக இறந்தவரின் சடலத்தை அடக்கம் செய்யாமல் வைத்துள்ளனர்.

அவர்கள் அந்த சடலத்துடன் சேர்ந்து கால்பந்து போட்டி பார்த்தனர். போட்டி முடிவடைந்த பிறகு அடக்கம் செய்யலாம் என்று அவர்கள் முடிவு செய்துள்ளனர். இது தொடர்பான வீடியோவை டாம் வாலண்டினோ என்ற பயனர் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் அமெரிக்க கோபா கால்பந்து போட்டியில் சிலி மற்றும் பெரு அணிகள் மோதும் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதற்கிடையில் அந்த சவப்பெட்டி பூக்கள் மற்றும் கால்பந்து வீரர்களின் ஜெர்ஸிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மேலும் இந்த வீடியோ வைரல் ஆகி வரும் நிலையில் பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.