தமிழகத்தில் வருகின்ற ஆகஸ்ட் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு 2024 பழனியில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பக்தர்கள் பங்கேற்கவும் ஆய்வு மாணவர்கள் ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பிப்பதற்கும் https:/muthamizhmuruganmaanadu2024.com/ என்ற தனி இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. அதனைப் போலவே ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பிக்க வழிமுறைகள் மற்றும் தலைப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அவ்வாறு எழுதப்படும் கட்டுரையில் மின்னஞ்சல் முகவரி, கைபேசி எண் மற்றும் புகைப்படம் ஆகியவை இடம் பெற்று இருக்க வேண்டும். சுருக்க குறிப்பு மற்றும் முழு கட்டுரை இணையதளம் மூலமாக ஜூன் 20ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பிக்க கால அவகாசம் ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. எனவே இன்றே கடைசி நாளாகும்.