கடலூர் மாவட்டம் கீழகொல்லை காமன் கோவில் தெருவை சேர்ந்தவர் செந்தில்நாதன். இவரது மகன் அஸ்வத்(4). கடந்த 2022-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அஸ்வத் திடீரென காணாமல் போய்விட்டார். இதுகுறித்து செந்தில்நாதன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சிறுவனை தேடி அலைந்தனர். அப்போது வீட்டிற்கு அருகில் இருக்கும் முந்திரி தோப்பில் சிறுவன் சடலமாக மீட்கப்பட்டார்.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த முருகவேல் என்பவருக்கும் செந்தில் நாதனுக்கும் இடையே இடப்பிரச்சனை காரணமாக தகராறு இருந்துள்ளது. இதனால் முருகவேலின் மகள் ரஞ்சிதா(22) சிறுவனை முந்திரிக்காவிற்கு அழைத்துச் சென்று கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரியவந்தது. இதனால் ரஞ்சிதாவை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த கடலூர் முதலாவது அமர்வு நீதிமன்றம் ரஞ்சிதாவுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவு பிறப்பித்தது.