
அதிமுக கட்சியின் முன்னாள் எம்பி பெருமாள் தற்போது காலமானார். இவர் கடந்த சில நாட்களாக உடல் நலகுறைவினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் மருத்துவமனையில் அதற்காக சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் தற்போது சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
இவர் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட பொருளாளர், முன்னாள் வாரிய துணை தலைவர் உட்பட பல்வேறு பதவிகளில் வகித்துள்ளார். அதிமுக ஆட்சிக்காலத்தின் போது பல்வேறு நலத்திட்டங்களை பொதுமக்களிடம் கொண்டு சேர்ப்பதில் முக்கிய பங்கு வகித்துள்ளார்.
இந்த மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவரை நாடாளுமன்ற எம்பி ஆக்கினார். மேலும் தற்போது அவர் உடல் நலக்குறைவினால் காலமான நிலையில் அவருடைய மறைவுக்கு அதிமுக கட்சியின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். மேலும் இவருடைய மறைவுக்கு எடப்பாடி பழனிச்சாமி ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துள்ளார்.