
நாடு முழுவதும் 99 ஆயிரத்து 970 உதவி ஓட்டுனர் பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பை ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதில் தெற்கு ரயில்வே மட்டும் 510 பணியிடங்கள் நிரப்பப்படும். இதற்கு ஏப்ரல் பத்தாம் தேதி முதல் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக கிழக்கு கடற்கரை ரயில்வே மண்டலத்தில் 1461 உதவி ஓட்டுநர் பணியிடங்களும், தென் மத்திய ரயில்வேயில் 989 இடங்களும், மேற்கு ரயில்வேயில் 885 இடங்களும், தென்கிழக்கு ரயில்வேயில் 796 இடங்களும், கிழக்கு ரயில்வேயில் 768 இடங்களிலும், மேற்கு மத்திய ரயில்வேயில் 759 இடங்களும் கிழக்கு மத்திய ரயில்வே 700 இடங்களும் நிரப்பப்பட உள்ளது.
பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு ஐடிஐ டிப்ளமோ, BE, BTECH முடித்தவர்கள், எலக்ட்ரானிக்ஸ் எலக்ட்ரிக்கல் ஆட்டோமொபைல் இன்ஜினியரிங், டிப்ளமோ இன்ஜினியரிங் முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். ஏப்ரல் 10 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க மே ஒன்பதாம் தேதி கடைசி தேதி.