இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க இடையேயான டி20 இறுதிப் போட்டியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் முறையாக டி20 உலக கோப்பை அறிமுகப்படுத்தப்பட்ட போது எம்.எஸ் தோனி தலைமையிலான இந்திய அணி கோப்பையை வென்றது. அதன் பிறகு கோப்பையை வெல்ல முடியாமல் தடுமாறிய இந்திய அணி கிட்டத்தட்ட 17 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்றுள்ளது.

இந்நிலையில் இந்தியா சாம்பியன் பட்டத்தை வென்ற நிலையில் கால்பந்து வீரரான மெஸ்ஸி கோப்பையை வாங்கிய அதே ஸ்டைலில் ரோகித் சர்மாவும் உலக கோப்பையை கையில் வாங்கினார். இது தொடர்பான புகைப்படத்தை பிபா வேர்ல்ட் கப் தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். மேலும் ரோகித் சர்மாவிடம் மெஸ்ஸி ஸ்டைலில் கோப்பையை வாங்குங்கள் என்று குல்தீப் யாதவ் கூறினார். அதற்கு ரோகித் சர்மா சரி என்று தலையை ஆட்டியதுடன் அவருடைய ஸ்டைலில் கோப்பையை வாங்கினார். இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.