மேக் இன் இந்தியா திட்டத்தின் வாயிலாக உள் நாட்டிலேயே நடுத்தர போக்குவரத்து விமானம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு இருப்பதாக இந்திய விமானப்படை தெரிவித்து உள்ளது. போக்குவரத்து, சரக்கு விநியோகம் உள்ளிட்ட பல பணிகளை மேற்கொள்ள நடுத்தர போக்குவரத்து விமானத்தை பயன்படுத்த இருப்பதாக இந்திய விமானப் படை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இந்த நடுத்தர போக்குவரத்து விமானம் 18 -30 டன் வரையிலான சரக்குகளை கையாளும் திறன்கொண்டிருக்கும் அடிப்படையில் தயாரிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேக் இன் இந்தியா திட்டத்தின் வாயிலாக இந்திய ஆயுதப் படை பாதுகாப்பு தேவைகளை பூர்த்திசெய்ய ஏவுகணைகள், கள துப்பாக்கிகள், விமானம் தாங்கிகள், ஆள் இல்லா விமானங்கள், போர் விமானங்கள், டாங்கர்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் ஆகியவற்றை உள் நாட்டிலே உற்பத்தி செய்வதற்கான பல்வேறு திட்டங்கள் தொடங்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் நடுத்தர போக்குவரத்து விமானத்தை தயாரிக்க இந்திய விமானப்படை திட்டமிட்டு உள்ளது. இந்த விமான உற்பத்திக்கான பணியில் ரஷ்யா மற்றும் இந்துஸ்தான் ஏரோனாட்டிக்கல் நிறுவனம் கூட்டு சேர்ந்து உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து இருக்கின்றனர்.