
சென்னை மாவட்டம் அண்ணா நகரில் ஸ்பா சென்டர் என்ற பெயரில் பாலியல் தொழில் நடத்தி வந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி போலீசார் அண்ணா நகர் பகுதியில் உள்ள ஸ்பா சென்டரை கண்காணித்து வந்தனர்.
அப்போது அங்கு வெளிமாநில பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்தது வந்தது உறுதி செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் போலீசார் ஸ்பா சென்டரை சோதனை நடத்தி பாலியல் தொழிலில் ஈடுபட்ட பெண்களை மீட்டு பெண்கள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
இதன்பின் பாலியல் தொழில் நடத்திய மேனேஜர் மற்றும் அந்த தொழிலில் ஈடுபட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். ஆனால் சென்டரின் உரிமையாளர் தலைமறைவாகி விட்டதால் போலீசார் அவரை தேடி வந்தனர்.
அப்போது அவர் மயிலாப்பூரில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கி இருந்தது போலீசாருக்கு தெரியவந்தது. அதன் அடிப்படையில் போலீசார் அவரை கைது செய்தனர். பின்பு அவரிடம் நடத்திய விசாரணையில் சென்னை மாவட்டம் முழுவதும் அவருக்கு 13 ஸ்பா சென்டர்கள் இருப்பது தெரிய வந்தது. இதனால் போலீசார் அவர் மீது வழக்குபதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.