தர்மபுரி மாவட்டம் பிலியனூர் அக்ரஹாரம் பகுதியில் அறநிலை துறைக்கு சொந்தமான அருள்மிகு முனியப்பன் சாமி கோயில் உள்ளது. இங்கு அமாவாசை நாட்களில் வருடம் தோறும் வரும் மார்கழி மாதம் இரண்டாவது செவ்வாய்க்கிழமை கோவில் திருவிழா நடைபெறுவது வழக்கம். இங்கு அன்னதானம் செய்வதற்காக கோயில் உண்டியல் வைக்கப்பட்டிருக்கிறது.

அப்போது உண்டியலில் கிடந்த ஒரு காசோலையை பார்த்தவர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளார்கள். அதாவது அந்த காசோலையில் 90.42 கோடி என்று தொகை குறிப்பிடப்பட்டிருந்தது.தர்மபுரி சவுச் இந்தியன் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் மகேந்திரன் என்பவருடைய பெயரில் இந்த காசோலை உண்டியில் போடப்பட்டுள்ளது. இது உண்மைதானா என்பதை கண்டறிய விசாரணை நடத்தப்பட்டு வருகிறது .மேலும் கோயிலுக்கு இவ்வளவு பெரிய தொகை கொடுத்த அந்த நபரை காண அங்குள்ள மக்கள் ஆர்வமாக உள்ளார்கள்.