30 ஆண்டுகால பழமையான கம்பி வடம் சார்ந்த தொலைக்காட்சி சேவை வலை அமைப்புகள் சட்டத்தை மாற்றியமைப்பதற்கு மத்திய அரசு தற்போது முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த புதிய சட்டம் youtube, இன்ஸ்டாகிராம் மற்றும் X போன்ற தளங்களில் செய்தி நிகழ்வுகளை சுயமாக உருவாக்கி வெளியிடுபவர்கள் மீது கடுமையான விதிமுறைகளை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

மேலும் ஊடகங்களில் செய்தி நிறுவனங்கள் என்ற பெயரில் போலியான செய்திகள் வெளியிடுபவர்களுக்கும் இந்த சட்டம் மூலமாக இனி கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.