பெரும்பாலான மக்கள் நீண்ட தூர பயணத்திற்கும், பாதுகாப்பான பயணத்திற்கும் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். ஆனால் ரயில் பயணத்திலும் ஆபத்து உள்ளது. ரயிலில் பயணிக்கும் போது விபத்தில் சிக்கி மரணம் அடைந்தால் எவ்வளவு இழப்பீடு கிடைக்கும் என்று யோசிப்பது உண்டு. ரயில் ஏறும் போதோ அல்லது பயணத்தின் போதோ விபத்து ஏற்பட்டால் பயணி அல்லது அவருடைய குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கப்படுகிறது. ஆனால் இந்த இழப்பீடு அனைத்து பயணிகளுக்குமே வழங்கப்படுவதில்லை. குறிப்பாக ரயிலில் ஏறும்போது அல்லது பயணத்தின் போது விபத்து ஏற்பட்டால் இந்த இழப்பீடு ஐஆர்சிடிசி பயணக் காப்பீட்டின் கீழ் தான் வழங்கப்படுகிறது.

இது போன்ற சூழ்நிலையில் வெறும் 45 பைசாவை மட்டும் செலவழித்தால் 7 முதல் 10 லட்சம் வரை காப்பீடு கிடைக்கும். இது மிகவும் மலிவான மற்றும் முக்கியமான ஒரு பாதுகாப்பு கவசம். ஐஆர்சிடிசியின் பயணக் காப்பீட்டின் கீழ் இழப்பீடு அல்லது காப்பீட்டு கோரிக்கை ஆன்லைனில் டிக்கெட்டுகளை முன்பதி செய்யும்போது காப்பீடு தேர்வு செய்த பயணிக்கு மட்டுமே கிடைக்கும். டிக்கெட் முன்பதிவு செய்யும்போது பயணிகள் இந்த காப்பீட்டு வசதி தேர்வு செய்யாவிட்டால் அவர்களுக்கு இந்த வசதியின் கீழ் பலன் கிடைக்காது.

இறப்பு அல்லது நிரந்தர இழப்பிற்கு 10 லட்சமும், பகுதி இழப்பிற்கு 7.5 லட்சமும், கடுமையான காயத்திற்கு 2 லட்சம், சிறிய காயத்திற்கு பத்தாயிரமும் வழங்கப்படுகிறது. ஐஆர்சிடிசி இணையதளம் அல்லது மொபைல் மூலமாக டிக்கெட் முன்பதிவு செய்த பயணக் காப்பீட்டிற்கான விருப்பம் வழங்கப்படுகிறது. இந்த காப்பீடு வெறும் 45 பைசாவுக்கு மட்டுமே கிடைக்கிறது. அதை தேர்வு செய்தால் பயணத்தின் போது ஏற்படும் விபத்துக்கு காப்பீட்டு தொகையை பெறலாம்.