
செங்கல்பட்டில் கள்ளச்சார விவகாரத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருவோருக்கு தல ஐந்தாயிரம் ரூபாய் வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் அறிவித்துள்ளார். மேல்மருவத்தூர் காவல் ஆய்வாளர் பிரேமா ஆனந்த்,மதுராந்தகம் மதுவிலக்கு அமலாக பிரிவு இசை துரைப்பாண்டியன், சித்தாமூர் எஸ்ஐ மோகனசுந்தரம் ஆகியோர் செங்கல்பட்டில் கள்ளச்சாராயத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு விவகாரத்தில் சஸ்பெண்ட் செய்ய முதலமைச்சர் ஸ்டாலின் நடவடிக்கை எடுத்துள்ளார்.