தமிழ்நாட்டில் திருச்சி மற்றும் மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அதிமுக சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அத அந்த தியாகி யார் என்று போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதில் ஒரு டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் விற்பனையில் ஆயிரம் கோடி ஊழல், உரிமம் வராத பார்களின் மூலம் 40,000 கோடி ஊழலா என்றும் எழுதப்பட்டுள்ளது.

அதோடு ஆயிரம் ரூபாய் கொடுப்பது போன்று கொடுத்து அந்த ஆயிரம் கோடியை அமுக்கியது யார் என்று மக்களின் கேள்வி எனவும் எழுதப்பட்டுள்ளது. மேலும் தமிழக டாஸ்மாக் கடைகளில் ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை செய்தி வெளியிட்டுள்ள நிலையில் திமுகவை விமர்சித்து தான் அதிமுக சார்பில் இரவோடு இரவாக இந்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது என்று கூறப்படும் நிலையில் இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.