மகளிருக்கு  மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்த போது பெரிய வரவேற்பு கிடைத்தது. இருந்தாலும் ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் முடிந்த நிலையில் ஊடகங்களில் இது குறித்து பேசப்பட்டாலும் பெரும்பாலான மக்கள் திமுகவின் வாக்குறுதியை மறந்து போயினர். திட்டத்திற்கான அறிவிப்பு வெளியாகி விண்ணப்ப பதிவு முகாம்கள் நடைபெற்றது. இதனையடுத்து  முதல்வர் ஸ்டாலின் சொன்னபடியே 1000 ரூபாய் வங்கிக் கணக்கில் வரவு வைத்த உடனே மக்கள் பெரும் ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைந்தனர். ஒரு கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு 1000 ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டம் மாநிலம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், பல பெண்கள் கோலமிட்டு முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர். இந்நிலையில், நாகர்கோயிலில் நன்றி தெரிவிக்கும் விதமாக கோலமிட்ட பெண்களை, பாஜக பிரமுகர் ஒருவர் தடுத்து நிறுத்தி சண்டையிட்டுள்ளார்.