மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விரிவாக்கம் செய்யப்படும் விண்ணப்பங்கள் அடுத்த 2 வாரங்களில் ஏற்கப்படும் எனவும் அவர்களின் பெயர்கள் இறுதி செய்யப்பட்டு ஜூலை 12ஆம் தேதிக்குள் புதிய பயனாளிகள் பெயர்கள் சேர்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 14ஆம் தேதி ஒரு ரூபாய் அனுப்பி வங்கி கணக்கில் சோதனை செய்யப்படும்.

ஜூலை 15ஆம் தேதி கூடுதல் பயனாளிகள் சேர்க்கப்படுவார்கள். அதனைப் போலவே ஆகஸ்ட் மாதமும் கூடுதல் பயனாளிகள் சேர்க்கப்படுவார்கள் எனவும் இந்த திட்டத்தில் ஏற்கனவே நிராகரிக்கப்பட்டவர்கள் மற்றும் புதிதாக திருமணமான குடும்ப தலைவிகள் விண்ணப்பம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்கள் இ சேவை மையம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.