
வேலையில்லாத இளைஞர்களுக்கு கைத்தறி கற்றுக் கொடுத்து அதன் மூலம் 11,500 ஊக்கத்தொகை வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திட்ட மூலம் 45 நாட்கள் பயிற்சி அளித்து நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக சேர்த்து வேலைவாய்ப்பு ஏற்படுத்திய தரப்படும் எனவும் பயிற்சி காலம் முடியும் வரை நாள் ஒன்றுக்கு 250 ரூபாய் வீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும் எனவும் அரசு தெரிவித்துள்ள நிலையில் இதற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் ஆகும். கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க loomworld.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.