
2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி மத்திய அரசு வெளியிட்ட தங்க பத்திரங்களுக்கு இறுதி விலையாக யூனிட் ஒன்றுக்கு 6938 ரூபாய் வழங்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இது வெளியிடப்பட்ட அன்று இருந்த (ரூ.3,119) விலையை விட சுமார் 122 சதவீதம் அதிகமாகும். இதன் மூலமாக முதலீட்டாளர்களுக்கு கிராம் ஒன்றுக்கு 3819 ரூபாய் லாபம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. முதலீட்டை திரும்பப் பெற ஆகஸ்ட் 5 இன்று கடைசி நாள் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.