சென்னை மாவட்டம் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 31 வயதுடைய பெண் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது, எனக்கும் எனது கணவருக்கும் குடும்ப பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் நான் அவரை விவாகரத்து செய்து விட்டேன். தற்போது நான் தனியாக வசித்து வருகிறேன். இந்த நிலையில் வேறு ஒருவருடன் திருமணம் செய்ய எனக்கு நிச்சயதார்த்தம் நடந்தது.

இதுபற்றி அறிந்த முன்னாள் கணவர் 40 லட்சம் ரூபாய் பணம் கொடுக்க வேண்டும். அப்படி பணத்தை கொடுக்க விட்டால் திருமணத்தை நிறுத்தி விடுவேன் என மிரட்டுகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இளம்பெண் புகாரில் குறிப்பிட்டுள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.