பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் ஏழைப் பெண்களுக்கு 300 ரூபாய் மானியத்துடன் 529 ரூபாய் விலையில் சமையல் கேஸ் சிலிண்டர் வழங்கப்படுகிறது. இதை பெற விரும்பும் பெண்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் வீட்டில் வேறு சிலிண்டர் இணைப்பு இல்லாதவராகவும் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ் டி, எம் பி சி, அந்தியோதயா அன்ன யோஜனா பயனாளிகள், தேயிலை தோட்ட பழங்குடியினர், வனவாசிகள் மற்றும் தீர்வு பகுதி மக்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் குறைந்த விலையில் சிலிண்டர் பெற டீலரிடம் நேரில் சென்று விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்றால் https://pmuy.gov.in/ என்ற இணையதள பக்கத்திற்குச் சென்று apply for PMUY Connection என்ற இடத்தில் அழுத்தியதும் திறக்கும் பக்கத்தில் உள்ள 3 கேஸ் நிறுவனங்களில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும். பிறகு பெயர் அல்லது பகுதி வாரியாக கேஸ் ஏஜென்சியை தேர்வு செய்து அதில் உள்ள விண்ணப்பத்தில் ஆதார் எண் மற்றும் பெயர் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து அடையாள ஆவணம், முகவரி ஆவணம் மட்டும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்தை பதிவேற்றம் செய்து ஒப்புதல் அளிக்க வேண்டும். அதன் பிறகு அந்த விண்ணப்பம் கேஸ் டீலருக்கு அனுப்பப்படும். இதற்கு ஒப்புதல் பெறப்பட்ட பிறகு குறைந்த விலையில் கேஸ் சிலிண்டரை பெறலாம்.