தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலைகளும் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதே சமயம் ரேஷன் கடைகளில் அரசு பல்வேறு புதிய திட்டங்களையும் செயல்படுத்தி வருகின்றது.  இதனிடையே நீண்ட காலமாக ரேஷன் பொருட்கள் பொதுமக்களுக்கு எடை குறைவாக வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த நிலையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் இருந்து தரம் மற்றும் எடை ஆகியவற்றை சரி பார்த்த பின்னரே அத்தியாவசிய பொருள்கள் லாரியில் ஏற்றப்படுவதையும் மேற்படி பொது விநியோகத் திட்ட பொருட்களை நகர்வு செய்யும் ஒவ்வொரு வாகனத்துடனும் 60 கிலோ எடை சரி பார்க்கக்கூடிய மின்னணு தராசு இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே இனிய ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்களில் எடை குறைவாக இருக்காது என்பதும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.