ரேஷன் கடைக்கு பொருட்கள் வாங்கப் போனால் குறைந்தது 50 ரூபாய்க்கு மேல் ஏதாவது பிற பொருள்களை வாங்கினால் தான் அரிசி, சர்க்கரை மற்றும் பாமாயில் தருவோம் என சில ஊழியர்கள் கட்டாயப்படுத்தும் சம்பவங்கள் நடந்து வருகிறது. இவ்வாறு ஊழியர்கள் கட்டாயப்படுத்தினால் அந்த பொருள்களை வாங்காதீர்கள். மாறாக ரேஷன் கடை எண், ஊழியர் பெயரை குறிப்பிட்டு புகார் செய்யுங்கள். அனைத்து ரேஷன் கடைகள் முன்பும் புகார் எண் வைக்கப்பட்டிருக்கும்.