
நாட்டில் ஏழை எளிய மக்களுக்கு மலிவு விலையில் அரிசி பருப்பு மற்றும் நிதி உதவிகளை வழங்குவதற்காக ரேஷன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இந்த திட்டத்தின் மூலம் வசதி படைத்தவர்களும் பயன்பெறுவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் குற்றம் சாட்டினர். அதன் அடிப்படையில் ரேசன் கார்டு வைத்திருக்கும் தகுதி இல்லாதவர்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டு வருகிறது.
கடந்த 2017 முதல் 2021 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் நாடு முழுவதும் மொத்தம் 3 கோடியே 41 லட்சம் நகல் மற்றும் போலி ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக பீகாரில் மட்டும் 10,000 ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டது. இதேபோன்று உத்திரப் பிரதேசம் உட்பட பல்வேறு மாநிலங்களில் தற்போது ரேஷன் கார்டு வைத்திருக்கும் தகுதி இல்லாத நபர்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளதால் விரைவில் அவர்களின் கார்டுகள் ரத்து செய்யப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. மேலும் தமிழ்நாட்டில் இதுபோன்ற விதிமுறைகள் இல்லை என்றாலும் மற்ற மாநிலங்களில் ரத்து செய்யப்பட்டு வருகிறது.