தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக இலவச அரிசி, மலிவான விலையில் மளிகை பொருட்களும் வழங்கபடுகிறது. இந்நிலையில்  500க்கும் குறைவான ரேஷன் அட்டைகள் இருக்கும் இடங்களில் பகுதி நேர ரேஷன் கடைகள் திறக்க வேண்டும் என்பது மக்களுடைய நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வரும் நிலையில், தமிழகத்தில் 500க்கும் குறைவான குடும்ப அட்டைகள் இருக்கும் இடங்களில் பகுதி நேர ரேஷன் கடைகள் புதிதாக திறக்கப்படும் என்று அமைச்சர் பெரியகருப்பன் அறிவித்திருக்கிறார்.

மேலும் 3 ஆண்டு கால திமுக ஆட்சியில் இதுவரை 699 முழுநேர ரேஷன் கடைகளும், 1310 பகுதிநேர ரேஷன் கடைகளும் என மொத்தம் 2009 ரேஷன் கடைகள் புதிதாகத் திறக்கப்பட்டுள்ளன என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கூறியுள்ளார்.