
ஆந்திர மாநிலத்தில் ஒரு இன்ஜினியர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மகள் சௌமியா. இவருக்கு 21 வயது ஆகிறது. சௌமியா யஸ்வந்தபுரம் பகுதியில் உள்ள தனியார் பல் மருத்துவக் கல்லூரியில் படித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக சௌமியா தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்தார்.
தேர்வு குறித்த பயத்திலிருந்த சௌமியா மன உளைச்சலில் இருந்ததாக தெரிகிறது. இதனால் பெற்றோர் சௌமியாவை நந்தினி லேஅவுட்டில் உள்ள மனநல காப்பகத்தில் சேர்த்து கவுன்சிலிங் அளித்து வந்தனர்.
அந்த காப்பகத்தில் இருந்து தப்பித்து வீட்டிற்கு ஓடி வந்த சௌமியா அவர்களது வீடு அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 5-வது மாடிக்கு சென்று திடீரென கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சௌமியாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்