லஞ்சம் வாங்குவது மட்டுமல்ல லஞ்சம் கொடுப்பதும் சட்டப்படி குற்றம் என்று நாம் கேள்விப்பட்டிருப்போம். ஒரு சில இடங்களில் லஞ்சம் கொடுத்தால்தான் சில வேலைகள் நடைபெறுகின்றன. இதனால் மக்கள் பலரும் பாதிக்கப்படுகின்றனர். இப்படியான நிலையில் அரசு அதிகாரிகள் மற்றும் போலீசார் உள்ளிட்டோர் கடமையை செய்ய லஞ்சம் கேட்டால் அது குறித்து புகார் அளிக்க லஞ்ச ஒழிப்புத்துறை ஏற்பாடு செய்துள்ளது.

044-22321090, 044-22321085, 044-22310989, 044-22342142 என்ற எண்களை தொடர்பு கொண்டு அல்லது 044-22321005 என்ற எண்ணுக்கு பேக்ஸ் அனுப்பியோ, [email protected] என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பியோ புகார் அளிக்கலாம். அதன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுக்கும்.