நடிகர் விஜய் ஆண்டனி மகள் மீரா இன்று காலை தற்கொலை செய்து கொண்டார். இது தமிழ் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் மனஅழுத்தில் இருந்ததால் தான் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. இதனையடுத்து அவரது தற்கொலைக்கான காரணத்தை அறிய, மீராவின் அறையில் தடயவியல் நிபுணர்கள், போலீசார் சோதனை செய்தனர்.

அப்போது, மீராவின் பாடப் புத்தகத்தில், ‘எனது நண்பர்கள், ஆசிரியர்களை மிஸ் செய்வேன். எல்லோரும் பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டும். லவ் யூ ஆல், தேங்க்யூ ஆல்’ என அவர் கடிதம் எழுதி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.