மதுரை மாவட்டம் நத்தம் பறக்கும் பாலத்தில் லாரி மீது கார் மோதி விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சென்னையில் இருந்து சிலர் மதுரைக்கு காரில் சென்று கொண்டிருந்தனர். இந்த நிலையில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் எதிர்பாராதவிதமாக பழுதாகி சாலையோரம் நின்ற லோடு லாரி மீது மோதி அப்பளம் போல நொறுங்கியது. இந்த விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 7 பேர் காயமடைந்தனர்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்த 7 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் உயிரிழந்த நபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.