திருச்சி மாவட்டத்தில் உள்ள லால்குடி தச்சன் குறிச்சி பெருமாள் கோவில் தெருவில் முருகானந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வெற்றிவேலன் என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவனுக்கு 13 வயது ஆகிறது. இவர் அந்த பகுதியில் இருக்கும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். சிறுவயதிலேயே வெற்றிவேலனுக்கு இதயத்தில் பிரச்சனை இருந்தது. அதற்கான சிகிச்சை பெற்று வந்துள்ளார். நேற்று வெற்றிவேல் வழக்கம் போல பள்ளிக்கு சென்றான்.

அப்போது எதிர்பாராதவிதமாக வெற்றிவேல் வகுப்பறையில் மயங்கி விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் வெற்றிவேலனை அருகில் இருக்கும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வெற்றிவேல் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.