
வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ள நிலையில் இது நாளை காலை ஒடிசாவில் மாநிலம் பூரி கடற்கரையில் கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதால் தற்போது தமிழகத்தில் புயல் கூண்டு எச்சரிக்கை ஏற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அதன்படி சென்னை, தூத்துக்குடி, பாம்பன், காரைக்கால், புதுச்சேரி, எண்ணூர், காட்டுப்பள்ளி, நாகை மற்றும் கடலூர் ஆகிய 9 துறைமுகங்களில் 1-ம் நம்பர் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.