வங்கதேசத்தில் நிலவும் கடும் வன்முறையால் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், அங்கு கல்வி பயின்று வரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களை பத்திரமாக சென்னை அழைத்து வந்தது தமிழ்நாடு அரசு. முதற்கட்டமாக முதல் விமானத்தில் 20 மாணவர்கள் வந்துள்ளதாகவும், அடுத்தடுத்த விமானங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் வந்துகொண்டிருப்பதாகவும், அயலக தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார்.

மேலும் முதலாவதாக வந்த இருப்பது மாணவர்களை சென்னை விமான நிலையத்தில் வரவேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்து, தமிழ்நாடு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை விளக்கினார் செஞ்சி மஸ்தான்.