தமிழகத்தில் பட்டா மாற்றம் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை ஆன்லைன் மூலமாக பெரும் வசதியை தமிழக அரசு தற்போது புதிதாக அறிமுகம் செய்துள்ளது. தற்போது வருவாய்துறை முழுமையாக டிஜிட்டல் மையமாகப்பட்டுள்ள நிலையில் இதன் மூலமாக நிலம் வாங்குபவர் அல்லது விற்பவர், பட்டா மாறுதல், நில எல்லை அளவீடு, புல வரைபடம் என அனைத்து விதமான சேவைகளையும் இனி ஆன்லைன் மூலமாக பெற்றுக் கொள்ளலாம். மேலும் இது குறித்த விவரங்களுக்கு http.eservices.tn.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.