
இந்தியா பார் கவுன்சில் விதிப்படி வழக்கறிஞர்கள் ஆடை விதிமுறையை பின்பற்றவில்லை என்ற புகார் காரணமாக வழக்கறிஞர்களுக்கு ஆடை கட்டுப்பாடு விதித்து தமிழக பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றங்களுக்கு செல்லும் வழக்கறிஞர்கள் ஜீன்ஸ் பேண்ட், முக்கால் பேண்ட் மற்றும் லெக்கின்ஸ் அணியக்கூடாது என்றும் நீதிமன்றங்கள் தவிர பிற இடங்களில் வழக்கறிஞர்கள் கழுத்துப்பட்டையோ, வக்கீல் கவுனையோ அணியக்கூடாது என்று கூறியுள்ளது.