உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். அதனால் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு வாட்ஸ்அப் நிறுவனம் தினம் தோறும் புதுவிதமான அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. அவ்வகையில் தற்போது வாட்ஸ் அப் செயலியில் அனுப்பிய செய்தியை 15 நிமிடங்களுக்குள் எடிட் செய்யலாம் என தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக இது சோதனை முறையில் குறிப்பிட்ட சில பயனாளர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்ட நிலையில் தற்போது அனைத்து பயனர்களும் இந்த வசதியை பயன்படுத்தி கொள்ளலாம் என வாட்ஸ் அப் நிறுவனம் அறிவித்துள்ளது.