தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரான செல்வப்பெருந்தகை இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, கமலாலயம் என்பது ரவுடிகளின் புகலிடமாகவும் பாதுகாப்பு அரணாகவும் மாறி உள்ளது. தமிழக பாஜக எந்த திசையில் பயணிக்கின்றது என்பதை எளிதில் புரிந்து கொள்ளலாம்.

தமிழகத்தில் சட்ட ஒழுங்கை பற்றியும் கள்ளக்குறிச்சி விஷ சாராயம் சாவு பற்றியும் வாய் கிழிய நாள்தோறும் பேசி வரும் அண்ணாமலை, கூலிப்படை தலைவன் சீர்காழி சத்யா உள்ளிட்ட பிரபல ரவுடிகளுக்கும் பாஜகவுக்கும் உள்ள தொடர்பு அம்பலமாகி வருவது குறித்து என்ன விளக்கம் தரப் போகின்றார் என செல்வப்பெருந்தகை சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்